கோலாலம்பூர், ஜூன் 8 :
கோலாலம்பூரின் பெரும்பாலான பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதனால் ஏற்படும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள கோலாலம்பூர் மாநகர சபை (DBKL) தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DBKL இன் கூற்றுப்படி, அதன் ஊழியர்கள் தமது நட்பு நிறுவனங்களுடன் சேர்ந்து எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள களத்தில் உள்ளனர்.
“நகரவாசிகள் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எப்போதும் கவனமாக இருக்கவும், வாகனம் ஓட்டும் போது எப்போதும் போக்குவரத்து அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









