கோலாலம்பூர், ஜூன் 10 :
பேராக் மாநிலத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் நேற்று வரை 8,032 கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) வழக்குகள் பதிவாகியுள்ளன.
மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் பசுமைத் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் முகமட் அக்மல் கமாருடின் கூறுகையில், பதிவான மொத்தம் 144 வழக்குகளில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் அடங்குவர்.
787 வழக்குகள் அல்லது தொற்றுநோய்களில் 10.5 விழுக்காடு 7 முதல் 12 வயதுக்குட்பட்ட ஆரம்பப் பள்ளி மாணவர்களை உள்ளடக்கியது, அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் 6,544 7 வயதுக்குட்பட்ட பிரிவினரையே பாதித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, மாவட்ட சுகாதார அலுவலகத்தின் (PKD) அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அல்லது 342 தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988 இன் படி, தானாக முன்வந்து 188 குழந்தை பராமரிப்பு மையங்களை மூடப்பட்டன.
மேலும் “மஞ்சாங் மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 67 பாலர் பள்ளிகள் அல்லது 35.2 விழுக்காடு பள்ளிகள் மூடப்பட்டதுடன், அதைத் தொடர்ந்து கிண்டா மாவட்டத்தில் 53 பாலர் பள்ளிகள் அல்லது 28.2 விழுக்காடு பள்ளிகள் மூடப்பட்டன.
இதுவரை மாவட்ட சுகாதார அலுவலகத்தினரால் 6,000 க்கும் மேற்பட்ட வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.