ரானாவ், ஜூன் 12 :
இங்குள்ள கம்போங் கிதுந்தூல் லாமாவில் உள்ள ஒரு வீடு நேற்று இடிந்து விழுந்ததில், 4 வயது குழந்தை உட்பட இருவர் சிக்கிக் கொண்டனர்.
மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 42 வயதுடைய பெண் மற்றும் நான்கு வயதுக் குழந்தையொன்றும் சிக்கி கொண்டனர் என்று சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் மாலை 6.16 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து, ஆறு பேர் கொண்ட குழு மற்றும் அதிகாரிகள், இயந்திரங்கள் மற்றும் அவசரகால சேவைகள் நிவாரணப் பிரிவு (EMRS) வேன் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
“இந்தச் சம்பவத்தில் 55 சதுர மீட்டர் அளவுள்ள நிரந்தரமற்ற வகை வீடு இடிந்து விழுந்தது.
“பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பான நிலையில் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார், அதே நேரத்தில் ஒரு சிறுவனுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
தீயணைப்பு படையினர் வருவதற்குள் குழந்தைகளை பொதுமக்கள் மீட்டு, உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி ஆய்வு செய்து, வேறு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்ததுடன், காலை 6.48 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.