முன்னாள் சபாநாயகர் டான்ஸ்ரீ அபாங் அகமது உராய் அபாங் மொஹிதீன் பெட்ரா ஜெயாவில் உள்ள நார்மா மருத்துவ மையத்தில் காலமானார்.
தனது 89வது வயதில் நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் தனது இறுதி மூச்சு விட்டார். 26 ஜூன் 1933 இல் கூச்சிங்கில் பிறந்த அவர், 1988 ஜூலை 12 முதல் 1990 ஜூலை 9 வரை செனட்டின் சபாநாயகராக இருந்தார்.
ஜாலான் மூடா ஹாஷிம், பெட்ரா ஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.










