பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா திடீர் மரணம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் குளியல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்து உள்ளதால் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபல நடிகர் நடிகைகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக பிரத்யூஷா கரிமெல்லா என்பவர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரத்யூஷா திடீரென குளியல் அறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் அவரது பெற்றோர்களுக்கும் போலீசார் தகவல் அளித்தனர். இந்த நிலையில் பிரத்யூஷா இறந்து கிடந்த குளியலறையில் கார்பன் மோனாக்சைடு சிலிண்டரை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதனால் பிரத்யூஷா மரணம் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here