லங்காவி, ஜூன் 12 :
கடந்த வாரம் பள்ளி விடுமுறையின் போது சுமார் 89,000 சுற்றுலா பயணிகள் லங்காவி தீவுக்கு வந்துள்ளனர்.
லங்காவி மேம்பாட்டு ஆணையத்தின் (LADA) தலைமை நிர்வாக அதிகாரி நசாருதீன் அப்துல் முத்தாலிப் கூறுகையில், தீவிற்கு வரும் படகு மற்றும் விமானப் பயணத்தின் அதிகரிப்பு இந்த எண்ணிக்கையை பதிவு செய்ததிற்கு முக்கிய காரணம் என்றார்.
“பள்ளி விடுமுறை நாட்களில் நாங்கள் ஒரு நாளைக்கு 30 முதல் 35 க்கும் மேற்பட்ட உள்வரும் விமானங்கள் ஈடுபட்டதாகவும், கோலா பெர்லிஸ் மற்றும் கோலக் கெடாவில் இருந்து ஒரு நாளைக்கு நான்கு பயணங்கலிலிருந்து ஒரு நாளைக்கு ஏழு பயணங்களாக அதிகரிக்கப்பட்டது ” என்று அவர் நேற்று, இங்குள்ள கிலிம் கார்ஸ்ட் ஜியோஃபாரஸ்ட் பூங்காவில் கண்டல் தாவரங்கள் நடுகை மற்றும் வளர்ப்புத் திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.