இரண்டு இயந்திரங்களுக்கு இடையில் சிக்கிய ஆடவர் பலி

கோல தெரெங்கானு, கம்போங் குபாங் இகானில் இன்று காலை 10.45 மணியளவில் நடந்த சம்பவத்தில், இரண்டு சாலை நடைபாதை இயந்திரங்களுக்கு இடையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். வான் எண்டோக் வான் சலே (59) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல தெரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் அப்துல் ரஹீம் மத் தின் கூறுகையில், இந்தச் சம்பவத்திற்கு முன், அங்கு நடைபாதை அமைக்கும் பணிக்காக மூன்று சாலை நடைபாதை இயந்திரங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன.

அருகிலுள்ள பகுதியில் வசித்த மரணமடைந்தவர் இயந்திரம் இருந்த பகுதிக்கு வந்து நடைபாதைத் தொழிலாளர்களுடன் உரையாடியதாகக் கூறப்படுகிறது. மரணமடைந்தவர் பேசிகொண்டிருந்தபோது, ​​ஒரு ஊழியர் பணியைத் தொடங்க இயந்திரத்தை இயக்கி, இயந்திரத்தை மாற்ற முயன்றார். இருப்பினும், சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் நடுவில் உள்ள இயந்திரத்துடன் மோதியதால், அது பின்னோக்கி நகர்ந்து மற்றொரு இயந்திரத்துடன் மோதியது. மரணமடைந்தவர் இரண்டு இயந்திரங்களுக்கு இடையில் நடுவில் நின்று சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது என்று அவர் இன்று இங்கே கூறினார்.

அவரது கூற்றுப்படி, பலத்த அடியால் பாதிக்கப்பட்டவரின் மார்பிலும் உடலிலும் காயம் ஏற்பட்டது. அவரது உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக இங்குள்ள சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here