‘காதல் மோசடியில்’ சிக்கி மூதாட்டி ஒருவர் RM4.3 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்தார்

குவாந்தான், ஜூன் 17 :

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஃபேஸ்புக்கில் அமெரிக்க குடிமகனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரின், ‘காதல் மோசடியில்’ சிக்கி மூதாட்டி ஒருவர் RM4.3 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளனர்.

சந்தேக நபர் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி பணம் கேட்டபோது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 66 வயதான பெண், நேற்று காவல்துறையில் புகார் அளித்ததாக, பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோ ராம்லி முகமட் யூசுப் கூறினார்.

2021 டிசம்பர் 2 முதல் 2022 மே 31 வரை அமெரிக்காவில் உள்ள எண்ணெய் ஆய்வு நிறுவனத்தில் புவியியலாளராகப் பணிபுரிந்ததாகக் கூறப்படும் சந்தேக நபருக்கு உதவியதாக, பாதிக்கப்பட்டவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரை ஏமாற்றுவதற்கு சந்தேக நபரால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் கடனை அடைக்க உதவி செய்தல், வேலை ஒப்பந்தம், வேலை ஊதியம், மருத்துவ செலவுகள் மற்றும் சந்தேக நபரின் தந்தைக்கான வழக்கில் வழக்கறிஞருக்கு செலுத்தும் பணம் உட்பட அனைத்து காரணங்களுக்காகவும் பணத்தை கோரியுள்ளார்.

மேலும் சந்தேக நபரது தந்தை கடன் பிரச்னையால் இறந்ததாகவும் கூறியுள்ளார்.

“இந்த காலகட்டத்தில், பாதிக்கப்பட்டவர் 190 பரிவர்த்தனைகள் மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தினை செலுத்தியுள்ளார், மொத்தமாக அவர் RM4,342,500 இழப்பை சந்தித்துள்ளார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது, மேலும் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தும் சமூக ஊடகங்கள் மூலம் அல்லது வற்புறுத்துதல் மூலம் பொதுமக்களை எளிதில் ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here