ஆப்கானிஸ்தானின் குருத்வாரா மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவில், நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் அங்கு குண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கியர்கள், இந்துக்கள் 100 பேருக்கு விரைவாக ஈ.விசா வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகமது நபிகள் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்துக்கள், சீக்கியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here