3 கார்கள் மோதல்: ஒருவர் பலி; மற்றொருவருக்கு பலத்த காயம்

பட்டர்வொர்த்தில் நேற்றிரவு இங்குள்ள ஜாலான் ராஜா உடாவில் அவர்கள் பயணித்த பெரோடுவா ஆக்ஸியா இரண்டு வாகனங்கள் மீது மோதியதில் 29 வயது நபர் கொல்லப்பட்டார். அவரது நண்பர் பலத்த காயமடைந்தார்.

நள்ளிரவு 12.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த பாதிக்கப்பட்ட நபர், செபராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக செபராங் பெராய் உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ரட்ஸி அஹ்மத் தெரிவித்தார்.

பின் இருக்கையில் இருந்த அவரது 20 வயது நண்பர் ஆபத்தான நிலையில் தற்போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் Perodua Axia காரை ஓட்டிச் சென்ற 20 வயதுடையவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று  இன்று தெரிவித்தார்.

Perodua Axia வலது பக்கம் திரும்பி எதிர் திசையில் வந்த ஹோண்டா சிட்டி கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.

இதன் தாக்கத்தால் பெரோடுவா ஆக்ஸியா வளைந்து சென்று சாலையோரத்தில் இருந்த பெரோடுவா அல்சா கார் மீது மோதியது. ஹோண்டா சிட்டி மற்றும் பெரோடுவா அல்சா ஓட்டுநர்கள் இருவரும் சிறு காயங்களுக்கு ஆளாகினர் என்று அவர் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here