பல்நோக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளை உட்படுத்திய விபத்தில், ஒப்பந்ததாரர் ஒருவர் மரணம்

மலாக்கா, ஜூலை 5 :

இன்று இங்குள்ள ஜாலான் பச்சாங்கில், மோட்டார் சைக்கிளிலிருந்து சறுக்கி விழுந்த ஓட்டுநர், பெரோடுவா அல்சா பல்நோக்கு வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காலை 8.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், டெலிகாம் மலேசியா (TM) நிறுவனத்தில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய, முஹமட் அஜிசன் அசார், 32, என்பவரே தலையில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் Yamaha 135LC மோட்டார் சைக்கிளில் லேபு ஆலோர் காஜா -மலாக்கா தெங்கா- ஜாசின் (AMJ) இல் இருந்து பச்சாங் அருகே பச்சாங் -ஜாலான் துன் பாத்திமா போக்குவரத்து சமிக்ஞை விளக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

பாதிக்கப்பட்டவர் அந்த இடத்திற்கு வந்தபோது, மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது என்றார்.

“பாதிக்கப்பட்டவர் எதிர் பாதையில் வந்த பெரோடுவா அல்சாவால் தாக்கப்பட்டு 25 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார், “தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்’ என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் மேலும் கூறுகையில், சம்பவத்தின் போது, ​​மழைத் தூறல் காரணமாக சாலையின் மேற்பரப்பு ஈரமாக இருந்தது என்றார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here