கோத்த கினபாலு, தவாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) காணாமல் போன ஏழு வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
முஹம்மது ஃபக்ரி ஜாஃப்ரா அஃபாண்டி முஹம்மது மௌலிதின் கம்பங் ஜாவா லனுட்டில் உள்ள அவரது வீட்டிலிருந்து 100 மீ தொலைவில் நேற்றிரவு 7.16 மணியளவில் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளியான சிறுவன் நண்பகல் வேளையில் காணாமல் போன போது, தனது வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அஞ்சப்பட்டது.