தேனோம், ஜூலை 12 :
கடந்த சனிக்கிழமை முதல் இங்குள்ள சுங்கை படாஸ், பனாவான் கோலா தோமானியில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன ஆடவர் நீரில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்படுகிறது. ஆனால் அந்த நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
25 வயதான அல்போனிஸ் @ எபோன் ஆம்பபை என்பவரே ஆற்றைக் கடக்க முயன்றபோது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் (PGO) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை நான்கு குழுக்களாக பிரிந்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
அங்குள்ள நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றங்கரையில் மேற்பரப்பு மீட்பு முறைகளைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
“சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் நேற்று பிற்பகல் 5.10 மணிக்கு தேடுதல் ஒத்திவைக்கப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் இன்று மீண்டும் மீட்பு நடவடிக்கை தொடரும் என்றார்.