சாலைத் தடுப்பில் மோதி, லோரியின் கீழ் விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14 :

நேற்று, கெப்போங்கில் இருந்து டாமான்சாரா வரையிலான பென்சாலா டோல் பிளாசாவில் நடந்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பில் மோதி, பின் லோரியின் கீழ் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதின் அப்துல் ஹமிட் கூறுகையில், 21 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற யமஹா லகெண்டா மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பில் மோதி, விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் சம்பவம் தொடர்பில் ​​இரவு 7.22 மணிக்கு ச தங்களுக்கு தகவல் கிடைத்தது என்றார்.

“பாதிக்கப்பட்டவர் டோல் பிளாசாவில் கட்டணம் செலுத்திய பிறகு ஓடும் லோரியின் கீழ் விழுந்தார், இதனால் அவர் பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, மேலும் இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

மேற்படி சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் கைரில் ஹெல்மி முகமட் இசாவை 019-3318339 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here