கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதால், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜூலை 20 :

கடந்த ஜூலை 11 முதல் ஜூலை 17 வரையிலான வாரத்தில் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை 51% அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் CovidNow இணையதளத்தின் இன்று காலை 7.26 மணி நிலவரப்படி, நாட்டிலுள்ள 18 முதல் 60 வயதுடைய பெரியவர்கள் மொத்தம் 16,121,366 தனி நபர்கள் அல்லது 68.5 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் முதல் அளவையும் 234,393 தனி நபர்கள் அல்லது 1.0 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் இரண்டாவது அளவையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதே வகுப்பினரின் மொத்தம் 23,045,245 பேர் அல்லது 97.9 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளனர், அதே நேரத்தில் 23,322,968 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 2,578,005 தனி நபர்கள் அல்லது 70.6 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் முதல் அளவையும்  116,513 தனி நபர்கள் அல்லது 3.2 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் இரண்டாவது அளவையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதே வகுப்பினரின் மொத்தம் 3,394,871 பேர் அல்லது 93.0 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளனர், அதே நேரத்தில் 3,415,698 பேர் அல்லது 93.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், 12 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினர், மொத்தம் 45,034 தனி நபர்கள் அல்லது 1.4 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் முதல் அளவை செலுத்திக் கொண்டுள்ளனர். அதே வகுப்பினரின் மொத்தம் 2,890,378 நபர்கள் அல்லது 92.9 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 2,969,549 நபர்கள் அல்லது 99.1 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

நாட்டின் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் மொத்தம் 1,452,781 சிறுவர்கள் அல்லது 40.9 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 1,766,632 சிறுவர்கள் அல்லது 49.8 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட தேசிய குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) மூலம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

நேற்று 13,659 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டது. அதில் முதல் டோஸாக 326 தடுப்பூசிகளும், இரண்டாவது டோஸாக 3,232 தடுப்பூசிகளும், 1,418 பூஸ்டர் டோஸ்களும் செலுத்தப்பட்டன. இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICK) கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 71,633,905 ஆகக் கொண்டுவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here