லஞ்சம் வாங்கியதாக சிலாங்கூர் மீன்வள மேம்பாட்டு ஆணைய இயக்குநர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலாம், ஜூலை 20 :

விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான விநியோகிஸ்தர் ஒருவரை நியமித்ததற்காக, ரொக்கமாக RM5,000 லஞ்சம் வாங்கியதாக, ஒரு அரசாங்க நிறுவனத்தின் இயக்குநர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மலேசியாவின் மீன்வள மேம்பாட்டு ஆணையத்தின் (LKIM) சிலாங்கூர் கிளையின் இயக்குநராக இருக்கும் 56 வயதான குசைரி ஹுசைன், என்பவர் தான் அதிகாரபூர்வ நிலையில் இருந்தபோது லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

நீதிபதி முகமட் அனஸ் மஹத்ஸீர் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளர் மூலம் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதை அடுத்து, அவர் தான் குற்றவாளி இல்லை என்று கூறி விசாரணை கோரினார்.

நவம்பர் 24, 2020 அன்று சபா பெர்னாமில் உள்ள சுங்கை பெசார் பகுதி மீனவர் சங்க அலுவலகத்தில் குற்றம் செய்ததாக குசைரி குற்றம் சாட்டப்பட்டார். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 165 இன் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

முன்னதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) துணை அரசு வக்கீல் இர்னா ஜூலிசா மாரஸ், ​​வழக்கு முடியும் வரை நீதிமன்றத்தில் தனது கடவுச்சீட்டை ஒப்படைத்துவிட்டு, அருகில் உள்ள எம்ஏசிசி அலுவலகத்திற்கு ஒவ்வொரு மாதமும் முதல் நாள் புகாரளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் ரிம10,000 ஜாமீன் வழங்க கோரினர்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நூர் அட்ஜ்ரி முகமட் நூர், குற்றம் சாட்டப்பட்டவர் குடும்பத்தின் ஒரே ஆதாயம் என்றும் அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதால் குறைந்தபட்ச ஜாமீன் கோரினார்.

இரு தரப்பு விண்ணப்பங்களை அமைய, ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் அருகிலுள்ள எம்ஏசிசி அலுவலகத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்பதோடு, ஒரு தனி நபர் உத்தரவாதம் மற்றும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு RM8,000 ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் அனுமதித்தது.

மேலும் இந்த வழக்கை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here