11 வயது மகள் மகாலட்சுமியை கொலை செய்ததாக தாயார் செண்பகவள்ளி மீது குற்றச்சாட்டு

பத்து பஹாட்,  யோங் பெங்கின் தாமான் புக்கிட் டிரோபிகாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வியாழன்  தனது 11 வயது மகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட  தாயார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். 34 வயதான செம்பகவள்ளியிடம், மாஜிஸ்திரேட் நுராசிதா ஏ ரஹ்மான் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் உள்ளது.

கடந்த ஜூலை 14 ஆம் தேதி மாலை 4.55 மணியளவில் யோங் பெங் 21 ஜாலான் டிராபிகா 14, தாமான் புக்கிட் டிரோபிகா, யோங் பெங் என்ற எண்ணில் உள்ள வீட்டில் 11 வயதான என். மகாலட்சுமியை கொலை செய்ததாக குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் படி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பு வழக்குரைஞர் நூர் இஸ்ஸாதி ரோஸ்மான், செம்பகவள்ளி சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. பிரேத பரிசோதனை மற்றும் இரசாயன அறிக்கையைப் பெறுவதற்காக இந்த வழக்கிற்கான தேதியை நூரசிதா செப்டம்பர் 13 ஆம் தேதியை நிர்ணயித்தார்.

ஒரு சிறுமியின் கழுத்தில் காயங்களுடனும் நெற்றியில் காயங்களுடனும் சடலமாக காணப்பட்டதாக ஊடகங்கள் முன்னர் தெரிவித்திருந்தன. ஆனால் பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here