கோலப்பிலா, ஆகஸ்ட் 5 :
கடந்த மாதம் போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளின் படி வேலையில்லாத ஒருவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
முஹமட் இக்ராம் சி. மன்சோர், 30, என்ற குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி நோர்மா இஸ்மாயில் முன்நிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர் தான் குற்றமற்றவர் என்று கூறிவிசாரணை கோரினார்.
முதற்கட்டமாக, ஜூலை 26 ஆம் தேதி காலை 11 மணியளவில், இங்கு அருகிலுள்ள ரெம்பாவ் நீதிமன்ற தடுப்புக் காவலில் 54.47 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 12(2)ன் கீழ் கட்டமைக்கப்பட்டு, அதே சட்டத்தின் பிரிவு 39A(2)ன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டிற்கு ஆயுள் தண்டனை அல்லது ஐந்தாண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை மற்றும் 10-க்கு குறையாத பிரம்படி என்பன வழங்க முடியும்.
இரண்டாவது குற்றச்சாட்டின்படி, ரெம்பாவ் பகுதியைச் சேர்ந்த முஹமட் இக்ராம், அதே நேரம், இடம் மற்றும் தேதியில் 3.97 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் (சட்டம் 234) பிரிவு 12(2)ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, அதே சட்டத்தின் பிரிவு 39A(1) இன் கீழ் தண்டனைக்குரியது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனை மற்றும் ஒன்பதுக்கு மேற்படாத பிரம்படிகள் என்பவற்றை வழங்குகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகாமல் இருந்த நிலையில், அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் முஹமட் அமிருல் நூர் ஹாஷிமி ஆஜரானார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை மற்றும் வழக்கு செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.