பொது இடத்தில் கத்தியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆடவருக்கு 5 ஆண்டுகள் சிறை!

கோலப் பிலா, ஆகஸ்ட் 8 :

பொது இடத்தில் கத்தியை வைத்திருந்த குற்றத்திற்காக, வேலையில்லாத ஒரு நபருக்கு அமர்வு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

நீதிபதி நார்மா இஸ்மாயில் முன்நிலையில் மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட பி விமல், 26, என்பவர் நீதிபதி முன்பு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குற்றச்சாட்டின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் பொது இடத்தில் சுமார் 24 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பழுப்பு நிற முனையுடைய கத்தி அதாவது ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி, தாம்பின் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் உள்ள வீட்டு குடியிருப்பு மைதானத்தில் இந்தச் செயலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கில், கூர்மையான, மற்றும் வெடிக்கும் பொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் 1958 இன் பிரிவு 6(1) இன் கீழ் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்க முடியும்.

இந்த வழக்கின் விசாரணையை துணை அரசு வழக்கறிஞர் முஹமட் அமிருல் நூர் ஹாஷிமி கையாண்டார், குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் வழக்கறிஞர் முஹமட் ஹபீஸ் லெமன் ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here