பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 13 :
செலாயாங் அருகே உள்ள காஞ்சிங் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்ததில் வலது கால் முறிந்த நிலையில் இருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 31 வயதான வெளிநாட்டவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 10.22 மணியளவில், இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.
“காலை 10.39 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியை அடைந்தனர், ஆனால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டோபர் ஜொனாதன் ஸ்ட்ரட் இருந்த இடத்தை அடைய அதிக நேரம் பிடித்தது என்றார்.
“அவர் நண்பகல் 12.50 மணிக்கு கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின் சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்,” என்று நோராஸாம் மேலும் கூறினார்.