பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உட்பட 17 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

சுங்கை பட்டாணி, ஆகஸ்ட் 16 :

இங்குள்ள திகாம் பத்து, தாமான் ரூ அருகே, இன்று பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரு சிறுமியின் வலது கை உடைந்தது, மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

திகாம் பத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் சுக்ரி ஹாஷிம் கூறுகையில், சம்பவம் தொடர்பில் தனது துறைக்கு காலை 7.40 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது, அதனைத் தொடர்ந்து தீயணைப்புவீரர்கள் குழு அந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

“சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​ஏறக்குறைய 10 வயதுடைய ஒரு பெண், வலது கை உடைந்த நிலையில் இருந்ததாகவும், அதே நேரத்தில் 10 சிறுவர்கள் மற்றும் ஐந்து சிறுமிகள் லேசான காயமடைந்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

“சம்பந்தப்பட்ட வேனின் 50 வயதான ஓட்டுநருக்கு தலையில் காயம் ஏற்பட்டது,” என்று அவர் இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.

தீயணைப்புவீரர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப சிகிச்சையை வழங்கிய பின்னர் அவர்களுள் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்றார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here