கோலா குபு பாரு, ஆகஸ்ட் 21 :
இங்கு அருகே உள்ள தாமான் பஹ்தேராவில் நேற்று அழகான பெண் குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டது.
உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் அர்சாத் கமருடின் கூறுகையில், வியாபாரியாகப் பணிபுரியும் 33 வயதுடைய ஒருவரிடமிருந்து காலை 9.49 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது தரப்பு அறிக்கையைப் பெற்றுள்ளது.
அவரது கூற்றுப்படி, ஒரு உணவகத்தில் இருந்த நாற்காலியில் குழந்தையைக் கண்டுபிடித்ததாக அந்த நபர் கூறினார், முதற்கட்ட விசாரணையில் அது பெண்குழந்தை என்று கண்டறியப்பட்டது, ஆனால் அக்குழந்தை எந்த இனம் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
“மருத்துவ அதிகாரியின் பரிசோதனையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், காயங்கள் அல்லது விலங்குகள் கடித்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 317வது பிரிவின்படி விசாரிக்கப்படுகிறது.
குழந்தையை அங்கேயே விட்டுச்சென்ற சந்தேக நபரைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.








