கோலாலம்பூர்: திங்கட்கிழமை (ஆகஸ்ட் 22) கெபோங்கில் ஒருவரைக் கைது செய்த போலீசார் 700,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
திங்கள்கிழமை இரவு 10.45 மணியளவில் 48 வயதுடைய நபரை போலீசார் கைது செய்ததாக நகர காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.
ஜாலான் விஸ்தா முத்தியாரா, கெப்போங்கில் அந்த நபரை நாங்கள் கைது செய்தோம். அவரிடம் 1,000 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 1,000 சியாபு மாத்திரைகள் இருப்பதைக் கண்டுபிடித்தோம்.
சந்தேக நபருக்கும் மெத்தம்பேட்டமைன்கள் உட்கொண்டிருந்தது உறுதியானது என்று அவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி நள்ளிரவு 12.35 மணியளவில் ஜாலான் பெர்காசா 3, புக்கிட் ஜாலிலில் உள்ள அடுக்குமாடி பிரிவுக்கு சந்தேக நபர் போலீசாரை அழைத்துச் சென்றதாக அவர் கூறினார். அங்கு 35,700 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 1.04 கிலோ சயாபுவை நாங்கள் கண்டுபிடித்தோம்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி குறைந்தது 708,900 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கும்பல் குறைந்தது நான்கு மாதங்களாவது செயலில் இருக்கும் என நம்பப்படுவதாக அஸ்மி கூறினார். சந்தேக நபர் போதைப்பொருட்களை அடுக்குமாடி குடியிருப்பில் சேமித்து வைத்திருந்தார் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் போதைப்பொருட்களை விநியோகிப்பதாக நம்பப்படுகிறது.








