தஞ்சோங் காராங், ஆகஸ்ட் 25 :
இங்குள்ள ஜாலான் லாமா பாகன் தெங்கோராக் என்ற இடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று அதிஷ்டவசமாக உயிர் தப்பியது.
காலை 7.40 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மரத்தாலான வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் அனைவரும், தலா மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உயிர் பிழைத்தனர்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், காலை 7.50 மணிக்கு சம்பவம் தொடர்பாக தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.
அதன்பின்னர், தஞ்சோங் காராங் மற்றும் செகிஞ்சான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து இயந்திரங்களுடன் 25 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழு அந்த இடத்திற்கு விரைந்துள்ளது.
“அங்கு வந்து பார்த்தபோது, தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது மற்றும் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
”வீட்டிற்கு முன்னால் இருந்த பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானது என்று நம்பப்படும் புரோத்தோன் சாகா காரும் தீயில் சிக்கியது” என்று அவர் கூறினார்.
37 நிமிடங்களில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு, காலை 10.50 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது என்று நோராஸாம் கூறினார்.