15-ஆவது பொதுத்தேர்தலில் எந்த ஒரு கட்சியும் 50 விழுக்காட்டுக்கு மேல் பெரும்பான்மையை பெற முடியாது என்கிறார் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 :

வரவிருக்கும் 15-ஆவது பொதுத் தேர்தலில் (GE15) எந்த ஒரு கட்சியும் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற முடியாது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

பெர்ஜாசா கட்சியின் “இம்பியான் நேஷனல் பெர்ஜாசா 2040” வெளியீட்டிற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர் கெராக்கான் தானா ஆயிர் (GTA) தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த முறை 50 விழுக்காட்டுக்கு மேல் பெறக்கூடிய கட்சி எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன்.

ஏனென்றால், பல கட்சிகள் போட்டியிடுவதால், வாக்குகள் சிதறக்கூடும் மேலும் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியில் இருந்து பிரதமர் வர வேண்டும் என்ற ஆசைகள் இருக்கின்றன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here