கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேகாவில் நடந்த 65ஆவது தேசிய தின அணிவகுப்பில், அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டதாக சந்தேகிக்கப்படும் பாதுகாவலரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
Dang Wangi காவல்துறைத் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயா, 50 வயதுடைய நபர் குறித்து புகாரினை பெற்ற பின்னர் மதியம் 1.54 மணிக்கு போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறினார்.
காலை 9.30 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள டத்தோ ஓன் ரவுண்டானாவில் உள்ள ஒரு உணவகத்தின் அருகே பறக்கவிடப்பட்ட இடத்திற்கு விமான கண்காணிப்பு போலீஸ் படை ஒரு ஆளில்லா விமானத்தை (சுட்டு) தரையிறுக்க வேண்டியிருந்தது.
சந்தேக நபரின் அறிக்கை மேலதிக நடவடிக்கைக்காக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு (CAAM) அனுப்பப்படும் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
தேசிய தின அணிவகுப்பின் போது ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் என்று CAAM ஏற்கனவே பொதுமக்களை எச்சரித்திருந்தது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ராயல் மலேசியன் விமானப்படை விமானங்கள் அப்பகுதியில் குறைந்த உயரத்தில் பறக்கும் என்பதால் பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.