பத்து பஹாட் வெள்ளம்: நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை சற்று குறைந்தது

பத்து பஹாட், செப்டம்பர் 17 :

பத்து பஹாட் மாவட்டத்திலுள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் நேற்று தங்கியிருந்த 236 பேருடன் ஒப்பிடும்போது, இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 17) காலை 8 மணி நிலவரப்படி 232 பேராக பதிவாகியுள்ளது.

மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு (JPBD) வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தின் தாமான் ஸ்ரீ பஞ்சோர், கம்போங் செங்குவாங், கம்போங் பாரு ஸ்ரீ காடிங், பெக்கான் ஸ்ரீ காடிங் மற்றும் கம்போங் ஸ்ரீ தஞ்சோங் உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

67 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும், கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 14) முதல் திறந்திருக்கும் SMK ஸ்ரீ காடிங்கின் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதில்குறிப்பிட்டுள்ளது.

புதன் கிழமை அதிகாலை 1.30 மணி முதல் 5.30 மணி வரை பெய்த கனமழை மற்றும் அதிக அலைகள் காரணமாக மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here