பத்து பஹாட் நிவாரண மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 50 பேர் இன்னும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

பத்து பஹாட், செப்டம்பர் 20 :

இம்மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, 25 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் தங்கியிருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி அவ்வெண்ணிக்கை 50 பேராக குறைந்துள்ளது என்று பத்து பஹாட்டின் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு (JPBD) செயலகம் தெரிவித்துள்ளது.

“அவர்கள் அனைவரும் SMK ஸ்ரீ காடிங்கின் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

“பாதிக்கப்பட்டவர்கள் தாமான் ஸ்ரீ பஞ்சோர், கம்போங் செங்குவாங், கம்போங் பாரு ஸ்ரீ காடிங், கம்போங் ஸ்ரீ தஞ்சோங் மற்றும் பெக்கான் ஸ்ரீ காடிங் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here