கோல திரெங்கானு, செப்டம்பர் 23 :
இங்குள்ள கம்போங் சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 18) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு முதற்கட்ட உதவியாக RM1,000 பிரதமர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டது.
இந்த பண உதவியை பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ முகமட் அனுவார் முகமட் யூனுஸ், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் வழங்கினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பிற உதவிகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தான் ஆலோசிப்பதாக முகமட் அனுவார் கூறினார்.
“சம்பவம் நடந்த இடத்தை நான் ஆய்வு செய்துள்ளேன், இந்த அசம்பாவிதத்திற்கு பிரதமர் சார்பாக நான் அனுதாபப்படுகிறேன் என்றார்.
இன்று கம்போங் சீனாவில் தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிறகு, “மாநில அரசாங்கத்தால் ஆரம்ப உதவி கிடைத்ததையும் நான் புரிந்துகொள்கிறேன், இன்று நான் பிரதமரின் சார்பாக ஒரு சிறிய நன்கொடையை வழங்குவதற்காக வந்தேன்’ என்றார்.
தற்காலிக உரிமம் (TOL) அந்தஸ்துள்ள நிலத்தில் கடை வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் மூலம் எவ்வாறு உதவுவது என்பது குறித்து பிரதமருடன் ஆலோசிப்பதாகவும் முகமட் அனுவார் கூறினார்.
இரவு 8.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தால் கம்போங் சீனாவின் ஜாலான் பண்டாரில் உள்ள துணிக்கடை, உணவகம், நகைக்கடை உள்ளிட்ட 12 கடைகள் எரிந்து நாசமானது.
திரெங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் முகமட் ஹ்ல்மன் அப்துல் ரஷித் கூறுகையில், இந்த விபத்தில் தீ விபத்தில் குற்றத்தின் கூறுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறினார்.










