சபாவின் தவாவ், ஜாலான் மெரோட்டா-கலாபக்கன், டும்பாஸ் பகுதிக்கு அருகில் காட்டு யானை மிதித்ததில் வயதான பெண் ஒருவர் இறந்ததாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சம்சியா அர்ஷாத் 67, தனது 60 வயதுடைய கணவர் தாஹிர் சல்லேவுடன் கம்போங் ஹிதாயத் பத்து 4 இலிருந்து கொங்சி 4 லாடாங் கெளபா சாவிட் செந்தரமாதாவுக்கு மோட்டார் சைக்கிளில் அவர்களின் பேரனைப் பார்ப்பதற்காக காலை 7.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
பெர்னாமாவின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் கணவர் இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. தவாவ் வனவிலங்கு திணைக்கள அதிகாரி பிரைமஸ் லாம்புட் கூறுகையில், டும்பாஸ் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்த சம்பவம் தொடர்பான புகார் தனக்கு கிடைத்தது.
இந்த யானை கர்ப்பிணிப் பெண் யானை அல்ல, ஏற்கனவே யானை காட்டுக்குள் விரட்டப்பட்டதால் மெரோட்டை நகரப் பகுதிக்கு வழிதவறி வந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இது மற்றொரு யானை, இது காலர் அணியவில்லை என்றார்.
இதற்கிடையில், தவாவ் காவல்துறைத் தலைவர் ஜாஸ்மின் ஹுசைனைத் தொடர்பு கொண்டபோது, சம்பவம் குறித்த புகாரைப் பெற்றதையும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.









