ஜார்ஜ் டவுன், லெபோ விக்டோரியா கடைவீதி வரிசையில் அமைந்துள்ள ஒரு சேமிப்பு கிடங்கு இரவு தீயில் எரிந்து நாசமானது. இரவு 8.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இரவு 9.13 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்களின் உதவியுடன் லெபுஹ் பந்தாய் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.
தீ விபத்து சுமார் 90% சேமிப்பு வசதிகளை அழித்துவிட்டது. இரவு 9.34 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அருகிலுள்ள தன்னார்வ தீயணைப்பு வீரர்களும் இந்த நடவடிக்கைக்கு உதவியதாக அவர் கூறினார். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.