பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் சட்டமன்றங்கள் கலைக்கப்படாது என்கிறது பக்காத்தான் ஹராப்பான்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 15:

பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணி நிர்வாகத்தின் கீழ் உள்ள பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டமன்றங்கள் (DUN) கலைக்கப்படாது என அக்கட்சி உறுதியளித்துள்ளது.

அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறுகையில், மக்களின் பாதுகாப்பைப் பற்றி சிந்திக்காமல் அதிகாரத்தை விரும்பும் அரசியல் தலைவர்களின் பேராசையை தனது கட்சி நிராகரிக்கிறது என்றார்.

மேலும் அம்மாநிலங்களில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here