புத்ராஜெயா, அக்டோபர் 17 :
மனைவியின் தங்கையை (மைத்துனியை) பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், ஒரு லோரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 20 பிரம்படிகள் வழங்கி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் டத்தோஸ்ரீ கமாலுடின் முகமட் சைட், டத்தோ நோர்டின் ஹாசன் மற்றும் டத்தோ ஹாஷிம் ஹம்சா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றக் குழு, அவரது மேல்முறையீட்டில் எந்தத் தகுதியும் இல்லை என்பதைக் கண்டறிந்த பின்னர் அவரது தண்டனைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது.
கடந்த பிப்ரவரி 2018 மற்றும் ஏப்ரல் 19, 2018 இல் கிளாந்தான், பாசிர் பூத்தேயிலுள்ள ஒரு வீட்டில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு, 2019 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி, மொத்தம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 20 பிரம்படிகள் விதித்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வயது குறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 376 (3) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் எட்டு ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், 10 க்கு குறையாத பிரம்படியும் விதிக்க முடியும்.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றஞ்சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தகுந்த காரணங்கள் இல்லாததால், தள்ளுபடி செய்யப்பட்டது.