தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் அவர்களின் துணைவியார் டத்தின் எஸ்.பார்வதி இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 17) இரவு 8.30 மணியளவில் காலமானார்.
71 வயதான டத்தின் பார்வதி அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று செவ்வாய்க்கிழமை அக்டோபர் 18, மாலை 3:00 மணியளவில் எண்: 13 Jalan Tempinis 3, Lucky Garden, Bangsar, Kuala Lumpur என்னும் முகவரியில் உள்ள அவர்தம் இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் அன்னாரின் நல்லுடல் செராஸ் மின்சுடலைக்குத் தகனத்துக்காகக் கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.