பெண்டாங், அக்டோபர் 18 :
பெண்டாங் ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வடைந்து (2.66 மீட்டர்) வருகிறது, நேற்றய அளவான 2.60 மீட்டருடன் ஒப்பிடும்போது இன்று இன்னும் அதிகரித்துள்ளது.
பெண்டாங் மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, லெப்டினன்ட் (PA) யுஸ்லினா யூசுஃப் கூறுகையில், ஆற்றின் எச்சரிக்கை அளவு 2.5 மீட்டராக உள்ள நிலையில, அதன் நீர் மட்டம் 1.66 மீட்டர் உயர்வடைந்துள்ளது.
ஆற்றின் அருகேயுள்ள இடங்களான கம்போங் பாண்டோக் ஹாஜி ஹுசின், கம்போங் செபெராங் பெண்டாங், கம்போங் பாங்கோல் கம்பிங் மற்றும் கம்போங் சுகாமாரி ஆகிய இடங்களில் இன்னும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இன்று காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை பெண்டாங் உறுப்பினர்களால் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.