கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144 பேராக குறைந்தது

அலோர் ஸ்டார், அக்டோபர் 29 :

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேராக குறைந்ததைத் தொடர்ந்து, பாலிங்கில் உள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்கள் இன்று மாலை 4 மணியளவில் முழுமையாக மூடப்பட்டன.

மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை, பேரிடர் மேலாண்மைக் குழுவின் (APM) கெடா செயலகப் பிரிவுத் தலைவர், மேஜர் (PA) முஹமட் சுஹைமி முகமட் ஜைன் கூறுகையில், பாலிங்கில் உள்ள மூன்று நிவாரண மையங்கலிலிருந்து மொத்தம் 108 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மூன்று நிவாரண மையங்களும் மூடப்பட்டன.

கோத்தா ஸ்டார் மற்றும் குபாங் பாசுவில் தலா ஒன்று என தற்போது இரண்டு வெள்ள நிவாரண மையங்கள் மட்டுமே இன்னும் செயலில் உள்ளன என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here