ஈப்போ:சித்தியவானில் உள்ள கம்போங் ஆச்சே தொழிற்சாலையில் கிரேன் சரிந்து விழுந்ததில் இரு மலேசிய ஆண்கள் உயிரிழந்தனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கிரேன் சரிந்து விழுந்ததில் அப்துல் ரஜிம் ஹஸ்ம்கி 33, மற்றும் மைதீன் அசிபின் 29, ஆகியோர் உயிரிழந்தோடு மோசட் அலினிட் 34, காயமடைந்தார்.
ஒரு கனரக தொழில்துறை கிரேன் அகற்றும் போது சரிந்தது. இதன் விளைவாக மூன்று பாதிக்கப்பட்டவர்கள் சிக்கிக்கொண்டனர் என்று செய்தித் தொடர்பாளர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கிரேன்கள் உதவியுடன் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், காயமடைந்த நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.