சித்தியவானில் பழுதூக்கி சரிந்து விழுந்ததில் இருவர் பலி, ஒருவர் காயம்

ஈப்போ, நவம்பர் 1 :

நேற்று மாலை சித்தியவானில் உள்ள கம்போங் ஆச்சே தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பழுதூக்கி சரிந்து விழுந்ததில் உள்ளூர் ஆண்கள் இருவர் உயிரிழந்தனர், மற்றொருவர் காயமடைந்தார்.

இந்த விபத்தில் அப்துல் ரஜிம் ஹஸ்ம்கி, 33, மற்றும் மைதீன் அசிபின், 29, ஆகியோர் உயிரிழந்தனர் மற்றும் மோசட் அலினிட், 34, என்பவர் காயமடைந்தார் என்று பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் பழுதூக்கிகளின் உதவியுடன் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், காயமடைந்த நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இரவு 10.55 மணியளவில் மீட்பு நடவடிக்கை முடிவடைந்ததாகவும் அவர் நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here