பினாங்கு முதல்வருக்கு கோவிட் தொற்று

ஜார்ஜ் டவுன்: 15ஆவது பொதுத் தேர்தலுக்கான (GE15) வேட்புமனுத் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயோவுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை (நவம்பர் 1) சுயபரிசோதனை செய்ததாகவும், தேவையான மருந்துகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் சோவ் கூறினார்.

அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். உங்களின் பாதுகாப்பு, குடும்பம் மற்றும் சமூகத்திற்கான அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்ற உங்களால் முடிந்ததை முயற்சி செய்யுங்கள் என்று அவர் செவ்வாயன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here