GE15: எதிர்கட்சி வாய்ப்பு வழங்கினாலும் அம்னோவே எனது தேர்வு என்கிறார் அன்னுவார் மூசா

15ஆவது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ15) தேசிய முன்னணி (BN) வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தற்போதைய கெத்ரே நாடாளுமன்ற உறுப்பினர்  டான் ஸ்ரீ அன்னுவார் மூசா, பெரிகாத்தான் நேஷனல் (PN) உள்ளிட்ட பிற கட்சிகளிடமிருந்து சலுகைகளைப் பெற்றதாகவும் ஆனால் அதனை நிராகரித்ததாகவும் கூறினார்.

கெத்ரே  அம்னோ தலைவரான அன்னுவார், பெரிகாத்தான் வேட்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டத்தோ கிளீர் முகமட் நோர் அந்த இடத்திற்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதிலும் அதிகாரப்பூர்வ நியமனக் கடிதத்தை இன்னும் பெறவில்லை என்பதும் தனக்குத் தெரியும் என்று கூறினார்.

கிளீர் என் நண்பன், நான் ஏன் அவன் வழியில் நிற்க வேண்டும்? நான் என் நண்பர்களிடமும், அவர்களுடன் சேர விரும்பிய கட்சிகளிடமும், ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டாம் என்று கூறியுள்ளேன்.

நான் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. நான் நானாக இருக்கிறேன் என்று அவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) இங்கு GE15 க்கான கிளந்தான் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்குவதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அம்னோவுக்கு விசுவாசமாக இருக்க நினைத்ததால் எதிர்கட்சிகளின்  வாய்ப்பை நிராகரித்ததாக அன்னுவார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here