உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பெர்கேசோவின் லின்டுங் 24 ஜாம் திட்டம் கட்டாயமில்லை: மனிதவள அமைச்சர்

KUALA LUMPUR, 3 Mei -- Menteri Sumber Manusia Datuk Seri R. Ramanan berucap pada Majlis Sambutan Hari Sedunia bagi Keselamatan dan Kesihatan di Tempat Kerja 2026 di Unifi Arena, Bukit Jalil hari ini.--fotoBERNAMA (2026) HAK CIPTA TERPELIHARA

கோலாலம்பூர்:

சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் (PERKESO) வேலை நேரம் அல்லாத விபத்து பாதுகாப்புத் திட்டமான ‘லின்டுங் 24 ஜாம்’ திட்டம் (Lindung 24 Jam), உள்நாட்டு தொழிலாளர்களுக்கு இனி கட்டாயமில்லை என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைப் பரிசீலித்த பின்னர், உள்ளூர் தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தைச் சுயவிருப்ப அடிப்படையிலான ஒன்றாக மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

இதனால் மலேசியத் தொழிலாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப இத்திட்டத்தில் இணைவதைத் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் முடிவு செய்து கொள்ளலாம்.

இருப்பினும், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இந்த லின்டுங் 24 ஜாம் திட்டம் தொடர்ந்து கட்டாயமாக்கப்படும் என்றும், தற்போதைய சட்ட விதிகளின்படி அது அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட வேளைகளில் ஏற்படும் விபத்துகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் இத்திட்டத்தின் அமலாக்க வழிமுறைகள் மற்றும் சுயவிருப்பப் பதிவு செயல்முறைகள் குறித்துப் பெர்கேசோ அமைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் அமைச்சர் ஆர். ரமணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here