குவா மூசாங், நவம்பர் 9 :
இங்குள்ள ஜாலான் ஃபெல்டா ஆரிங் 6 இல், இன்று காலை அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் பசுவின் மீது மோதியதில் ஒருவர் இறந்தார்.
அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் யமஹா Y15 மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதுடைய முஹமட் ஷாருல் ஹக்கிமி ஹஸ்லிமி என்பவர் தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறுகையில், பாதிக்கப்பட்டவர் ஃபெல்டா ஆரிங் 6ல் இருந்து ஃபெல்டா ஆரிங் 4ல் உள்ள தனது பணியிடத்துக்குச் சென்று கொண்டிருந்தார் என்றும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, ரோட்டின் நடுவில் ஒரு பசு திடீரென வந்ததால், அவரது மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
“மோதலின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் சாலையில் விழுந்து, பலத்த காயமடைந்தார். ஃபெல்டா அரிங் 1 ஹெல்த் கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பாதிக்கப்பட்டவர் கிளினிக்கிற்கு செல்லும் வழியில் இறந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும், சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.