நீலாயில் இன்று காலை Recron Malaysia Sdn Bhd தொழிற்சாலைக்கு அருகில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (என்எஸ்இ) 280ஆவது கிலோமீட்டரில் தெற்கு நோக்கி செல்லும் பாதையில் ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் லோரி டிரைவர் பலியானார்.
காலை 11.40 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால், NSEயின் நான்கு வழிச்சாலையும் மூடப்பட்டு, 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்ததாக நெக்ரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஒருவர் பலியானார். இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். இரண்டு கனரக வாகனங்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் உட்பட மொத்தம் ஐந்து வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன, என்று மீட்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.