மியன்மாரின் தேசிய தினத்தை முன்னிட்டு 5,774 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்பட தலைவர்களை இராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. வெளிநாட்டினர் சிலரும் கைதாகி சிறையில் உள்ளனர்.

இந்தநிலையில் மியன்மார் நாட்டின் தேசிய தினத்தையொட்டி சிறையில் இருந்து 5,774 கைதிகளுக்கு மியன்மாரின் மாநில நிர்வாக கவுன்சில் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்துள்ளது.

அரசு தொலைக்காட்சி சேனலான எம்ஆர்டிவியை மேற்கோள் காட்டி சின்ஹுவா இத்தகவலை தெரிவித்துள்ளது. பொதுமன்னிப்பு பெற்றவர்களில் இங்கிலாந்து முன்னாள் தூதர் விக்கி பவ்மேன், ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னெல், ஜப்பானிய பத்திரிகையாளர் டோரூ குபோடா மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கலைஞர்கள் ஆகியோரும் அடங்குவர்.

இங்கிலாந்தின் தூதராக பணியாற்றிய விக்கி பவ்மேன் தனது வெளிநாட்டவரின் பதிவுச்சான்றிதழில் குறிப்பிட்ட முகவரியில் இருந்து வேறு முகவரியில் வசிப்பதை தெரிவிக்க தவறியதால் கைது செய்யப்பட்டார். அவரது கணவர் ஹெட்டீன் லின்னும் கைது செய்யப்பட்டார். அவரும் இந்த பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னெல், மியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஆலோசகராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here