செர்டாங், தாமான் புத்ரா பெர்மையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 22 வது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் ஒரு ஆணின் சடலம், அக்குடியிருப்பின் அருகிலுள்ள கால்வாயில் இரத்த வெள்ளத்தில் கிடக்க கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் மதியம் 12.34 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் பிரிவு பொறுப்பாளர, முகமதுல் எஹ்சான் முகமட் ஜெய்ன் கூறினார்.
அவரது கூற்றுப்படி, செர்டாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இரண்டு இயந்திரங்களுடன் மொத்தம் எட்டு உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்கு வரும்போது, 34 வயதுடைய நபர் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பின் 22 வது மாடியில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது” என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
“சம்பவத்தின் போது, அந்த நபர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலதிக நடவடிக்கைக்காக குறித்த சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.