தியோமன் மாநிலத் தொகுதிக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும்

குவாந்தான்: பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் முகமட் யூனுஸ் ரம்லி மரணமடைந்ததைத் தொடர்ந்து தியோமன் மாநிலத் தொகுதிக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நவம்பர் 24ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும், டிசம்பர் 3ஆம் தேதி முன்கூட்டியே வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்கள் சனிக்கிழமை (நவம்பர் 19) நவம்பர் 22 வரை திறக்கப்படும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முகமட்  யூனுஸ் சனிக்கிழமை (நவம்பர் 19) அதிகாலை இறந்ததையடுத்து தியோமானுக்கான தேர்தல் இடைநிறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here