பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோலாலம்பூரில் உள்ள ஶ்ரீ பசிபிக் ஹோட்டலுக்கு வந்தார். அங்கு அவர் தேசிய முன்னணியினர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது தேசிய முன்னணி சகாக்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது. மலேசியாவுக்கு நிலையான அரசு தேவை என்று சரவணன் சுட்டிக்காட்டினார்.