கூச்சிங், நவம்பர் 21 :
கடந்த சனிக்கிழமை மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, 15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) வாக்களிப்பு பாராம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று காலை ஆரம்பமானது.
அத்தொகுதியில் 12 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன என்றும், காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை அல்லது 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் (EC) செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.