தேசிய முன்னணி (BN) அடுத்த கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்க பக்காத்தான் ஹராப்பான் (PN) உடன் ஒத்துழைக்க விரும்புகிறதா என்பதை முடிவு செய்வதற்கு இன்னும் சிறிது அவகாசம் கேட்டுள்ளது என்று பிஎச் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். அவர்கள் ஒரு குழுவாகவும், தொகுதியாகவும் முடிவெடுப்பார்கள். மேலும் இதற்கு முன் செய்யப்பட்ட அனைத்து கையெழுத்துகளும் செல்லாது என்று இன்று தேசிய முன்னணி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஒரு ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
PH இன் பிரதமர் வேட்பாளராக இருக்கும் அன்வார், விவாதங்களில், BN அவரை பிரதமராக ஆதரிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக கூறினார். தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் தனது (அஹ்மட் ஜாஹிட்) நீதிமன்ற குற்றச்சாட்டுகளை கைவிடுவது உட்பட எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று அவர் கூறினார்.
பேராக்கில் BN மற்றும் PH இடையேயான ஒத்துழைப்பை ஒரு நேர்மறையான தொடக்கம் என்றும் அன்வார் விவரித்தார். இரு கூட்டணிகளும் ஒன்றாக வேலை செய்வதற்குத் தேவையானதைப் பெற்றுள்ளன என்று கூறினார்.
அதன் GE15 பிரச்சாரத்தின் போது PH , BNஇன் எதிர்ப்பு கூறுகள் பற்றி கேட்டபோது, அன்வார் இதை ஒப்புக்கொண்ட அதே வேளை எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாததால், அரசாங்கத்தை அமைக்க PH க்கு இன்னும் பிற கட்சிகளின் ஆதரவு தேவை என்றார்.
எந்தவொரு கட்சியும் அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டணியும் கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்க தனிப்பெரும்பான்மை பெறாதபோது GE15 தொங்கு நாடாளுமன்ற சூழ்நிலையுடன் முடிந்தது.
நவம்பர் 19 அன்று நடந்த வாக்கெடுப்பில் பக்காத்தான் ஹராப்பான் (PH) 82 நாடாளுமன்றத் தொகுதிகளையும், பெரிகாத்தான் நேஷனல் (73), தேசிய முன்னணி 30 இடங்களையும் வென்றது. ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மைக்கு மொத்தம் 112 இடங்கள் தேவை.









