உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நவம்பர் 20 ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி 3 கோல்கள் அடித்து ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் இரண்டாம் பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்து அசத்தியது. ஆனால் ஈரான் அணியால் இரண்டு கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் இறுதியில் 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை இங்கிலாந்து வீழ்த்தியது.
நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின. அமெரிக்க அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் (82-வது நிமிடத்தில்) கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் வேல்ஸ் வீரர் பாலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலாக மாற்றினார். இறுதியில் இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.